search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் தற்கொலை"

    • ஆறுமுகம் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி சன்னியாசிபட்டி பகுதி மேட்டுப்பாளைய த்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மனைவி இறந்து விட்டார்.

    இதனால் ஆறுமுகம் மனைவி இறந்த துக்கத்தில் நீண்ட நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதை யடுத்து உறவினர்கள் ஆறுமுகத்தை ஒரு தனியார் மரு த்துவமனைக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு முகம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    பின்னர் இதுகுறித்து ஆறுமுகத்தின் மகன் வினோத் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார்.
    • வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, பொம்மராஜுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 55) விவசாயி. இவரது மனைவி துளசி (50). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து அவரவர்கள் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

    மகன் கல்லூரியில் படித்து வருகிறார். மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் தோட்டத்திற்குள் நுழைவதை தடுக்க மின் வேலி அமைத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் தோட்டத்தில் ரோஜா பூக்களை பறித்து வருவதற்காக நேற்று காலை துளசி தனியாக தோட்டத்திற்கு வந்தார். அப்போது கணவன் அமைத்த மின்வேலியில் அவர் சிக்கி உடலில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு மனைவி துளசி மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் அமைத்த மின்வேலியில் தனது மனைவியே சிக்கி இறந்து விட்டாரே என மன உளைச்சலில் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட கிராமத்தினர் இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குடிக்க பணம் கேட்டு வெங்கடாசலம் தகராறு செய்துள்ளார்.
    • மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள புதூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 46). இவரது மனைவி ஜெயந்தி. இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    வெங்கடாசலம் காலை நேரத்திலேயே மது அருந்துவது வழக்கமாம். நேற்று காலையும் இதேபோல குடிக்க பணம் கேட்டு வெங்கடாசலம் தகராறு செய்துள்ளார்.

    ஆனால் பணம் இல்லை என்று ஜெயந்தி தர மறுத்துள்ளார். இந்நிலையில் கோபமாக அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்ட வெங்கடாசலம் அங்கிருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஜெயந்தி கொடுத்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே மனைவி திட்டியதால் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). விவசாயக் கூலி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் மீண்டும் சண்டை வந்ததால் கோபமடைந்த சீனுவாசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கிய நிலையில் அவரது வீட்டின் அருகே கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவரது கணவருக்கு சக்கரை வியாதியும் ரத்த கொதிப்பும் இருந்தது, இந்நிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது மனைவி திட்டியதாக கூறப்படுகிறது
    • இதனால், வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் எலவடி கிராமத்தில் வசிக்கும் முருகன் (வயது47) விவசாயம் தொழில் செய்து வரும் இவருக்கு லட்சுமி (42) என்ற மனைவியும் அஜித்(24) அபிதா(22) என்ற மகனும் மகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக தெரிகிறது. அபிதாவிற்கு திருமணம் ஆகி சென்றுவிட்டார் என கூறப்படுகிறது

    . முருகனுக்கு சர்க்கரை வியாதியும் ரத்த கொதிப்பும் இருந்து வருவதாகவும் அதற்கு மருந்து சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முருகன் கடந்த ஒரு வாரமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் முருகனை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் முருகன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் குருவி நத்தம் சேர்ந்தவர் நாகராஜ். (வயது 65). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது சம்பவத்தன்று நாகராஜ் குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். இதற்கு மனைவி தேவகி பணம் தர மறுத்துள்ளார் இதனால் நாகராஜ்  கோபித்துக் கொண்டு அழகிய நத்தம் பகுதியில் இருந்த மோட்டார் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தூக்கணம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடலூர் அருகே மனைவியுடன் தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • வாசுதேவன் தனது வயலில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெத்த நாயக்கன் குப்பம் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வாசு தேவனுக்கும் வளர்மதிக்கும் தங்களது மகன் கல்லூரியில் சேர்ப்பது தொடர்பாக குடும்ப சண்டை நடந்து ள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த வாசுதேவன் தனது வயலில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.

    இதனை தொடர்ந்து வாசுதேவனை சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வாசுதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×